பசிலிடம் நேரடியாக ஜனாதிபதி கூறிய விடயம்

Date:

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளார்.

இவ்வாறே பசில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி சம்மதிக்க வைப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை தான் முதலில் நடத்துவேன் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தாம் தனது கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுவேன் என்றும் ஜனாதிபதி பசிலிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு மற்றும் கட்சியின் அரசியல் பற்றி சிந்தித்தால் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனால், மக்கள் ஜனாதிபதித் தேர்தலை கோருவதாகவும், வீழ்ந்த நாட்டை தாம் கையகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள ஜனாதிபதி, மக்கள் தம்மைப் புறக்கணிப்பார்கள் என நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொஹொட்டுவ இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...