சீரற்ற வானிலையால் இதுவரை 17 மரணங்கள் பதிவு

0
135

நாட்டை பாதித்த மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி மாவட்டத்தில் 02 பேரும், கம்பஹா மாவட்டத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 08 மாவட்டங்களில் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,749 பேர் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here