ரணில் இல்லையேல் மீண்டும் ‘அரகலய’ போராட்டம் வெடிக்கும் – இப்படி எச்சரிக்கின்றது ஐ.தே.க.

Date:

“இலங்கையின் தற்போதைய நிலைமையில் நாட்டை ஆளக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே. அவர் ஆட்சியில் தொடர வேண்டும். அவர் இல்லையேல் மீண்டும் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடையும். மீண்டும் ‘அரகலய’ போராட்டம் வெடிக்கும். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை சகல தரப்பினரும் இணைந்து வெற்றியடையச் செய்ய வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்  கூறுகையில்,

“அரகலய போராட்டத்தின் விளைவாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறிச் செல்லும். சர்வதேசமும் எமது நாட்டுக்கு உதவிகளை வழங்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பித்தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குகின்றது என்பதை நாட்டிலுள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...