ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில்ஊறிய மட்டைகள்!

Date:



“வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரணிலும், சஜித்தும் சுயநலவாதிகள் என்றும், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் அவர் சாடினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கே தான் ஆதரவு வழங்குவேன் என்றும் அவர் அறிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மைத்திரிபால இந்த அறிவிப்பை விடுத்தார்.

“விஜயதாஸ ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்தான். அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். நாட்டுக்காகத் துணிந்து செயற்படும் அரசியல்வாதியே அவர்.” – என்றும்  மைத்திரிபால மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...