நாமல் ராஜபக்ஷ படுதோல்வி அடைவார் – எஸ்.பி.திசாநாயக்க

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, படுதோல்வி அடைவார் என நுவரெலியா மாவட்டக் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கினிகத்தேன கூட்டுறவு விழா மண்டபத்தில் நடைபெற்ற மஸ்கெலியா தொகுதியின் கூட்டுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

அவரின் கோரிக்கைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர்த்தகரான. தம்மிக்க பெரேரா பெருமளவு பணத்துடன் தேர்தலுக்கு தயாராகி, அந்த பணத்திற்காக பசில் ராஜபக்ஷ பேராசையுடன் உழைத்தார்.

இத்தேர்தலுக்கு நாமல் ராஜபக்ச சரியானவர் அல்ல என தாம் தெரிவித்ததையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து, தேர்தலில் தோற்க விரும்பவில்லை என தொழிலதிபர் தம்மிக்க பெரேரா விலகிக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...