மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், இந்த கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.