13 வயது மாணவனை சீரழித்த பிக்கு கைது!

Date:

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வட்டவளை ரொசெல்லா ஹைதாரி விகாரையின் பிரதம பிக்கு நேற்று (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி விகாரைக்கு வரவழைக்கப்பட்டு பிரதம பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவன் தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பிரகாரம், மாணவன் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்படவுள்ள நிலையில், பிரதம பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...