துப்பாக்கிகளை மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – துய்யகொந்த

Date:

பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலத்தில் சிவிலியர்கள் பெற்றிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.துய்யகொந்த தெரிவித்துள்ளார்.

”உயிர் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கடந்த காலத்தில் சிவிலியர்கள் பலர் பாதுகாப்பு அமைச்சில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பெற்றிருந்தனர்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களை கடந்த நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. குறித்த காலப்பகுதியில் 85 வீதமான துப்பாக்கிகள் மீள கையளிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த கால எல்லை ஒக்டோபர் 30ஆம் திகதிவரை பின்னர் டிசம்பர் 31ஆம் திகதிவரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

கையளிக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் ஜனவரி 20ஆம் திகதிக்குப் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இன்னமும் பலர் துப்பாக்கிகளை கையளிக்கவில்லை. ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளை கையளிக்க வேண்டும். கையளிக்காதவர்களுக்கு எதிராக 1916ஆம் ஆண்டு 33ஆம் ஆண்டு துப்பாக்கி சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.

பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த பணியை முன்னெடுக்கிறது. இதற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார்...

மஹிந்த சமரசிங்கவுக்கு அரசாங்கத்தின் உயர் பதவி?

அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதராக தற்போது பணியாற்றி வரும் மஹிந்த சமரசிங்கவுக்கு, அரசாங்கத்தின்...

காதலனை சேர மன்னார் யுவதி எடுத்த தைரியமான முடிவு!

இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருவோரின்...

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை முன்னேற வேண்டும் – ஐ.நா

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும்...