சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கோழி இறைச்சி

Date:

சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, அதைச் செயல்படுத்தும் வகையில், ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரத் தேவைகள் தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திட முன்மொழியப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...