உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர், பாராளுமன்றதலதில் தெரிவித்தார்.