முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை கோரிக்கை விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்புக் கடிதத்தின் நகலை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகப் பிரிவு தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.