பாடகர் மாணிக்கவிநாயகம் காலமானார்

Date:

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தனது 78 ஆவது அகவையில் நேற்று மாலை   இதய கோளாறு காரணமாக காலமானார்.


இதய கோளாறு காரணமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு 
சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம் வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 


திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும.  நடித்துள்ளார்.

பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.


இதேநேரம் ஈழத் தமிழர்களின் நெஞ்சம்கொண்ட பாடலான விடை கொடு எங்கள் நாடேகடல் வாசல் தெளிக்கும் வீடேபனை மர காடே, பறவைகள் கூடேமறுமுறை ஒரு முறை பார்போமா என்னும் பாடலைப் பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...