நாளை ஆஜராவதாக ராஜித்த உறுதி

Date:

தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது. 

சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார். 

பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...