சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின் போது, தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்கும், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்வதில் தீவிரமாக உதவியதற்கும் டாக்டர் நந்தலால் வீரசிங்க நன்றி தெரிவித்தார் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கையின் தற்போதைய செயல்திறன் வெற்றிகரமாக உள்ளது என்றும், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் மத்திய வங்கியின் பங்கிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார் என்றும் திருமதி கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.
தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தொடங்குவதன் மூலமும், நிலையான பொருளாதாரத்தைப் பராமரிப்பதன் மூலமும் நாடு உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மேலும் கூறியுள்ளார்.
