எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பேக்கரிப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு (23) 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
