சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028 ஆம் ஆண்டுவரை அரசு வரி வருவாயை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முடியாது என்று வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் இருக்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் படி, 2028 வரை கீழ்மட்டத்தில் வாழும் மக்களின் தேவைகளுக்காக இந்த வரி பணத்தை பயன்படுத்த முடியாது. நிவாரணங்களும், உதவிகளும் வழங்க முடியாது,” என அவர் கூறினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் ‘திட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மீன்பிடி உபகரணங்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் நேற்று (31) கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
