ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப விழா நாளை வெள்ளிக்கிழமை (29) கலகெதர பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
பிராந்தியங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்தி, முக்கிய பகுதிகளுக்கிடையிலான பயண நேரத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்தும் முக்கிய மைல்கல்லாக இந்த திட்டம் கருதப்படுகிறது.
