இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (09) இந்த மாவட்டங்களில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், இலகுவான உடைகளை அணிதல் மற்றும் வெளிப்புற பணிகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலையை அடிக்கடி கவனித்தல், சிறுவர்களை மூடப்பட்ட வாகனங்களுக்குள் தனியாக விடாமல் இருப்பது ஆகியவற்றிலும் விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
