ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்கு – எதிர்க்கட்சித் தலைவர் கவலை

Date:

ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்குமே உரித்தாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடிய நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,குறைந்த எடை கொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும்’மனிதாபிமான சுற்றுலா’வின் நான்காம் நாள் விஜயத்தை இன்று(29) சூரியவெவ நகரில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன் “குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு” என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை, சூரியவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான சுஹக பிரதீப் அவர்களின் சூரியவெவ ஐக்கிய இளைஞர் சக்தி அலுவலகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் மதவாதம், இனவாதம், பொய்களைக் கொண்டே வெற்றி பெற்றதாகவும்,ஒரு காட்போர்ட் தேசபக்தியை உருவாக்கி, சிங்கள பௌத்த சிந்தனைகள் கணக்கில் எடுக்கப்படாது, இனவாதத்தையும், மதவாதத்தையும், தீவிரவாதத்தையும், பொய்யையும் பரப்பியது இந்த அரசாங்கமே என்றும் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களில் அரசாங்கம் நம் நாட்டை கண்ணீரில் மூழ்கும் ஒர் சொர்க்கமாக மாற்றிவிட்டதாகவும்,மறுபுறம் இருண்ட சொர்க்கமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது மாத்திரமன்றி இன்று இந்த நாடு பஞ்சபூதமாகவும் தேசிய வள விற்பனை சொர்க்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...