காரைநகர் பிரதேச சபைக்கு மீண்டும் ம. அப்புத்துரை

Date:

காரைநகர் பிரதேச சபையில்  தவிசாளராக மீண்டும்  மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார்.

காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் தோல்வியடைந்தமையினால் தவிசாளர் பதவியை இழந்தார். இதன் காரணமாக இன்று காலை உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் ரஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெற்றது.

இதன்போது மீண்டும் மயிலன் அப்புத்துரையின் பெயர் தவிசாளராக பிரேரிக்கப்பட்டது. இதன்போது 11 பேர் கொண்ட சபையில் 7 பேர் மட்டுமே பிரசன்னமாயிரிந்தபோதும் வேறு பெயர் ஏதும் பிரேரிக்கப்படவில்லை. இதனால் மயிலன் அப்புத்துரை மீண்டும. தவிசாளராக போட்டியின்றித் தேர்வானார்.

இதேநேரம் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...