பஸ் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவை கட்டணங்களை உயர்த்தவும் அனுமதி

Date:

இன்று (24) அதிகாலை 03.00 மணி முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகரான பஸ் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்துக் கட்டணங்களை திருத்தியமைக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு விலை சூத்திரத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விலைச் சூத்திரத்திற்கு நேற்று (23) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...