Tuesday, May 7, 2024

Latest Posts

கசூரினா கடலில் மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று  மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற யாழ். இந்து  மாணவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

கோண்டாவிலிருந்து 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றயைவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டவர் 4மணி நேர தேடுதலின் பின்பு சடலமாக மீட்கப்பட்டார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.