இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இந்தியா நடவடிக்கை

Date:

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக படகு எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் சென்றமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து சென்னையில் உள்ள எக்மோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட வல்வெட்டித் துறையை சேர்ந்த இரு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன் பிரகாரம் அடுத்த வாரம் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...