மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

Date:

ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக கொழும்பு மறைமாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று சென்று வாக்குமூலம் அளித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கும் பொருட்டே அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்கள் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அதை சட்டமா அதிபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...