யாழில் விசர் நாய் கடித்து இளைஞர் ஒருவர் மரணம்

Date:

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடித்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்தார்.

ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நாய் கடித்து இயலாமைக்குள்ளான மேற்படி இளைஞர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் விசர் நாய் கடித்தே இளைஞர் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது

அந்த இளைஞரைக் கடித்த விசர் நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் எனக் கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோரும், உயிரிழந்த இளைஞருடன் பழகியவர்களும் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...