வாழ வேண்டிய வயதில் நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களும் மீட்பு

Date:

நுவரெலியா – இறம்பொ​டை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்று காணாமற்போன ஏனைய இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

வவுனியாவிலிருந்து சென்ற சிலர், 12ம் திகதி பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதிக்கு நீராடச் சென்றிருந்தனர்.

நீரின் வேகம் அதிகரித்தமையினால் 07 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமற்போன ஏனைய மூவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , முதலில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் ஏனைய இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...