வாழ வேண்டிய வயதில் நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களும் மீட்பு

Date:

நுவரெலியா – இறம்பொ​டை நீர்வீழ்ச்சியை அண்மித்து குளிக்கச்சென்று காணாமற்போன ஏனைய இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

வவுனியாவிலிருந்து சென்ற சிலர், 12ம் திகதி பிற்பகல் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதிக்கு நீராடச் சென்றிருந்தனர்.

நீரின் வேகம் அதிகரித்தமையினால் 07 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமற்போன ஏனைய மூவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , முதலில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் ஏனைய இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...