நன்றி தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ள செந்தில் தொண்டமான்!

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய அறவழி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தி மலையகத்தில் பல மாவட்டங்களிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை வலுப்பெற செய்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளவதோடு, எதிர்வரும் 24ஆம் திகதி கம்பனிகளுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்மானம் எட்டப்படவில்லை என்றால் இந்த போராட்டம் வலுப்பெறும் எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...