ஒரே முச்சக்கர வண்டியில் சென்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

Date:

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்று (14) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது மாணவர்களும் வண்டியின் சாரதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி வளைவு ஒன்றில் கவிழ்ந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யாழ்.பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காலை இரண்டு முச்சக்கரவண்டிகளில் மாணவர்களை ஏற்றிச் சென்றதாகவும் இயந்திரக் கோளாறு காரணமாக முச்சக்கரவண்டியில் இருந்த மாணவர்கள் ஒரு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் யாழ். பொஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் யாழ்.கொழும்புத்துறை இந்துக் கல்லூரி மற்றும் கொழும்புத்துறை துரைராசா மகா வித்தியாலயத்தின் ஆரம்ப தர மாணவர்கள் ஆவர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...