Thursday, April 25, 2024

Latest Posts

நாட்டில் இருந்து கடல் வழியே தப்பிச் செல்ல முயன்ற 75 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 75 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று (3) அதிகாலை திருகோணமலைக்கு வடக்கே, திருகோணமலைக்கு கிழக்கே கடற்பரப்பில் 51 பேர் கொண்ட குழுவொன்று பல நாள் கப்பலில் பயணித்த வேளையில் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

41 பேர், 05 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடத்தலுக்கு தலைமை தாங்கிய 06 சந்தேகநபர்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மாவரவில பகுதியில் உள்ள கடையொன்றை சோதனையிட்டதுடன், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாரானதாக சந்தேகிக்கப்படும் 24 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு வாலச்சேனை மற்றும் ஹலவத்தலை பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

03 மாதங்கள் முதல் 50 வயது வரையிலானவர்கள் அங்கிருந்ததாக கடற்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.