Friday, April 26, 2024

Latest Posts

ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையே மோதல்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் முன்னணிக்கும் இடையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய பலரை ஆளுனர்களாக நியமிக்க தீர்மானித்திருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளுனர் பதவிகளுக்கு தனியான பெயர்களை முன்வைத்துள்ளமையினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திசாநாயக்க மற்றும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷமேல் செனரத் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆளுனர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது அந்த பதவிகளில் கடமையாற்றும் மூன்று ஆளுநர்களுக்கு அனுமதி வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லலித் யூ கமகே, வில்லி கமகே, ஏ.ஜே. ஆளுநர் பதவிகளில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு முஸம்மில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.