மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்!

Date:

மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்று முன்தினம் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதன்போது அம்புலன்ஸின் சாரதி தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிபவர் எனவும், தப்பியோடிய சாரதி முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுபவர் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறித்த சாரதிக்கு பல்வேறு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் குறித்த அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்தி பல கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை கைது நடவடிக்கையின் போது குறித்த இரு நபர்களும் தாக்கியதில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்...

செம்மணிப் பேரவலம்! தீவிரமடையும் அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித...

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...