உலகப்புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்புக்கு கமாண்டோ படை

Date:

உலகப்புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

பதான், ஜவான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வருவதாக மகாராஷ்டிர மாநில அரசிடம் ஷாருக்கான் கடந்த 5-ம் திகதி எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளார்.

அந்த புகாரிமுறைப்பாட்டின் பேரில், ஷாருக்கானின் பாதுகாப்பை வய் பிளஸ் பிரிவுக்கு உயர்த்துமாறு மகாராஷ்டிர உளவுப் பிரிவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் தகவல் அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் பயணம் செய்யும் போது அவரைப் பாதுகாக்க 6 கமாண்டோக்கள், 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பொலிஸ் வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...