நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியில் அப்போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடுகளில் தெரிவித்த தகவல்களையும், தொடர்ந்து எமக்கு செய்திகளை வழங்கும் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சில தகவல்களையும் அடிப்படையாக வைத்தோம்.
ஆனால், அந்தத் தகவல் உண்மையல்ல என்று பின்னர் தெரியவந்தது.
இந்தச் செய்தியானது வெறும் செய்தியாகவே எம்மால் பிரசுரிக்கப்பட்டதே தவிர, பேராசிரியர் சன்ன ஜயசுமனவையோ அல்லது அவரது மனைவியையோ அவமதிக்கும் நோக்கத்துடன் அல்ல.
எனினும், பேராசிரியர் சன்ன ஜயசுமனவையோ அல்லது அவரது மனைவியையோ இச்செய்தி மனம் புண்பட வைத்திருந்தால், எங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
~ Team LNW

