ரொஷான் ரணசிங்கவின் அமைச்சை மீளப்பெற ஜனாதிபதி முடிவு

Date:

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவை இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்ததாகவும், அதனை செய்ய முடியாது என தான் தெரிவித்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யாவிடின் விளையாட்டுப் அமைச்சை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும் அதன் பின்னர் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறும் தான் கூறியதாகவும் ரணசிங்க கூறினார்.

இலங்கை கிரிக்கெட்டை கொள்ளைக் கும்பல் வழி நடத்துவதாகவும் அதனால் இடைக்கால குழுக்களை ஒழிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்த அவர், இடைக்கால குழுவிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பது கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து இந்த குழுவின் நியமனத்தை நீக்குங்கள் இல்லையேல் தனக்கு கீழ் விளையாட்டு துறையை எடுப்பேன் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் கூறினார்.

என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு உங்கள் விருப்பப்படி முடிவெடுக்குங்கள் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக கூறினார். நான் நியமித்த குழுவை ஒருபோதும் நீக்கமாட்டேன் என்று ரொஷான் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...