நவம்பர் ’21’ இற்கு முன்னர்புதிய அமைச்சரவை

Date:


பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குள் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் அமைச்சர்கள் அமைச்சுகளில் பொறுப்பேற்கும் வகையில் இந்தச் செயல்பாட்டை முன்னெடுக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற உள்ளதுடன், தேர்தல் முடிந்த முதல் வாரத்திலேயே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதன் முதல் கட்டமாக 25 இற்கும் குறைவான அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் பேச்சுகளை நடத்தியுள்ளதுடன், அமைச்சுகள் அனைத்து ஏற்கனவே விஞ்ஞானப்பூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், நெடுஞ்சாலை உட்பட அனைத்து அமைச்சுகளிலும் அமைச்சுகளுக்கு பொருத்தமில்லாத வகையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்த திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்கள் பொருத்தமான அமைச்சுகளின் கீழ் கொண்டுவரும் வகையில் அமைச்சுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அமைச்சர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...