ரவியின் செயலால் கடும் கோபத்தில் ரணில்!!

Date:

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு கட்சியின் செயலாளர் ஊடாக ரவி கருணாநாயக்கவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடும் கோபமடைந்துள்ளதாக முன்னர் செய்தியொன்றில் நாம் தெரிவித்திருந்தோம்.

இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்கிரமசிங்க இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை சாகல ரத்நாயக்கவுக்கு வழங்க கடுமையாக முயற்சித்து வந்தார்.

விக்கிரமசிங்க இந்த இரண்டு எம்.பி பதவிகளுக்கான நியமனங்களை முடிந்தவரை தாமதப்படுத்த விரும்பியதுடன் ரவி கருணாநாயக்க தனது பெயரை கட்சியின் செயலாளர் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பினார்.

இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் ரொனால்ட் சி. பெரேராவைத் தொடர்பு கொண்டு, இருவருக்கும் இந்த ஆசனங்கள் சொந்தமாக இருப்பதால், ஆசனங்களைப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரவி கருணாநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் அளவுக்கு ரணில் விக்கிரமசிங்க கோபமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று (நவம்பர் 18) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...