வடக்கில் புலம்பெயர் மக்களின் காணிகள் அபகரிப்பு

Date:

யுத்த சூழலில் வவுனியா மாவட்டத்திலிருந்து புலம்பெயர் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா ஓமந்தை மற்றும் பன்றிக்கெய்தகுளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்தது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகளை அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் அபரித்துகொண்டு, பிரிதொரு தரப்பினருக்கு வழங்கப்படுவதாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த காணிகள் நீண்ட காலமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உறவுகளினால் பராமரிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் உள்ளுர் வாசிகளார் காணிகளை பராமரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே அரசியல் பின்புலம் கொண்ட சிலர் அடாவடித்தனமாக காணிகளை சுபீகரித்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச செயலகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும் எனவும், இல்லையேல் இது மீண்டும் சமூக விரிசலுக்கு ஏதுவான காரணியாக மாறுவதோடு, சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என பிரேதச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...