வட மாகாண ஆளுநரின் வர்த்தமானி குறித்து ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி முடிவு

Date:

வடக்கு மாகாண ஆளுநரால் சட்ட முரணாக வெளியிட்ட  வர்த்தமானியை இரத்தச் செய்யுமாறு  நீதியமைச்சருக்கு ஜனாதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 2022-10-27 அன்று இரு நியதிச் சட்டங்களை உருவாக்கி அவற்றை 2303/29 இலக்க வர்த்தமானியில் பிரசுரித்திருந்தார். இதனை தவறு எனச் சுட்டிக் காட்டி வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை விட்ட அதேநேரம் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் (2022-12-05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட சமயம் வடக்கு ஆளுநரால் 2022-10-27 அன்று வெளியிட்ட இரு வர்த்தமானியினையும் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராயபக்சாவிடம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணிப்புரை விடுத்தார். இதற்கமைய இரு வர்த்தமானிகளும் இந்த வாரம் இரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில்...

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

இருளில் நடக்கும் ரணில் வழக்கு!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு தொடர்பான...

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...