மருத்துவர்களின் ஓய்வு வயது குறித்து வெளியானது விசேட வர்த்தமானி!

Date:

மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை திருத்தும் இடைக்கால விதிகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதன்படி, மருத்துவ ஆலோசகர்கள், அரசு மருத்துவ அலுவலர்கள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கட்டாய ஓய்வு வயது கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி திருத்தப்பட்டுள்ளது.

• ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், டிசம்பர் 31, 2022க்கு முன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 62 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், 63 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 61 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், 62 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அலுவலர்கள், 61 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவ அதிகாரிகள், 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

எவ்வாறாயினும், ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையில் ஓய்வு பெறும் வயதினர் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். ஜூன் 30 வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.

அதேபோன்று ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்குள் ஓய்வு பெறும் வயதினர் டிசம்பர் 31 வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...