ஜப்பான் நிறுவனத்திடம் கொமிஷன் கேட்ட அமைச்சர்! ஜனாதிபதியிடம் மாட்டிக் கொண்டார்!!

Date:

இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாக இலங்கைக்கு உதவிகளை வழங்க மாட்டோம் என எதிர்கட்சி அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பார்த்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தை தொடர்பு கொண்டு, அவர் ஏன் அப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் என்று கேட்டார்.

ஜப்பான் தூதரகம் தன்னிடம் ஆதாரம் உள்ளதால் இப்படியொரு கருத்தை தெரிவித்ததாக கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்டமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, இது தொடர்பில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, தமது சாட்சியங்களை வெளிப்படுத்திய அவர்கள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையங்களின் விஸ்தரிப்புப் பணிகளைச் செய்துவரும் ஜப்பானிய நிறுவனமான Taisei நிறுவனத்திடம் இந்த நாட்டின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் மில்லியன் கணக்கான டொலர்களை கொமிஷன் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனம் கொமிஷன் தொகையை செலுத்த மறுத்ததாக ஜப்பானிய தூதரகம் ஜனாதிபதிக்கு அறிவித்தது.

மறுபுறம், அழைப்பு கிடைத்தவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஊவா மாகாணத்தின் கொழுத்த அமைச்சர் எனவும் அவர் சுமார் இரண்டு தசாப்தங்களாக சுதந்திரமாக செயற்பட்டு எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...