மன்னாரில் 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

0
134

மன்னாரில் நீண்ட காலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபரிடமிருந்து இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட 5,150 போதைப்பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here