நேற்றிரவு (05) கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் தனது கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
54 வயதான சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில், இன்று (06) காலை 6.30க்கும் 7.00 மணிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.