மீண்டும் ரங்கே பண்டாரவிற்கு நியமனம்

Date:

2024ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சி முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை சிறிகொத்த பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் பாலித்த ரங்கே பண்டாரவிடம் கோட்டே கட்சித் தலைமையகத்தில் வைத்து வழங்கினார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகித்த ரங்கே பண்டாரவுக்கு பதிலாக ரவி கருணாநாயக்க இந்த ஆண்டு அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் பரவியிருந்த போதிலும் அது நடைபெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...