விபத்தில் தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி, தாய் காயத்துடன் வைத்தியசாலையில்

Date:

ஹைலெவல் வீதியில் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் சீமெந்து ஏற்றப்பட்ட லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தாரின் தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்திசையில் பாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம அலுபோதல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

கொஸ்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SJB தேசிய பட்டியல் எம்பி பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து...

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...