ISIS சந்தேகநபர் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

Date:

ISIS சந்தேகநபர் என கருதப்படும் உஸ்மான் புஷ்பராஜை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது அவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் உஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான அவர் தெமட்டகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக் கூறி நான்கு இலங்கையர்கள் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

உஸ்மான் புஷ்பராஜை கைது செய்ய, காவல்துறை சமீபத்தில் பொதுமக்களின் உதவியை நாடியதுடன், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...