முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரவும் எதிர்பார்க்கப்படவில்லை என விஜேவர்தன குறிப்பிடுகின்றார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதாவது 17.27%.
தற்போதைய அரசியல் சூழ்நிலையின்படி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த முடிவு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.