சஜித் கட்சிக்குள் குழப்பம்

Date:

சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அக்கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் இணைவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்களாவர்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இதே குழுவினர் இதே பிரேரணையை முன்வைத்தபோதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால் ஏமாற்றம் அடைந்து இந்த நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட அக்கட்சியைச் சேர்ந்த சிலர் வேட்புமனு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...