Tuesday, October 22, 2024

Latest Posts

20 சீனர்கள் இலங்கையில் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் பாணந்துறை, கோரக்கன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷூ05 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு ஸ்கேல், 332 யுஎஸ்பி கேபிள்கள், 133 மொபைல் போன் சார்ஜர்கள், 17 ரவுட்டர்கள், 02 ஐபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த ஹோட்டலில் 20 இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் நிதிக் குற்றங்களைச் செய்தார்களா என்பது விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.