கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடை

Date:

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் இறக்கும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. விசாரணையை அடுத்து, கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம் மறு அறிவித்தல் வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து எரிபொருளை வெளியிட மாட்டோம் என நிரூபித்துள்ளது.

நாசவேலைகள் இடம்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...