கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடை

Date:

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் இறக்கும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. விசாரணையை அடுத்து, கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம் மறு அறிவித்தல் வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து எரிபொருளை வெளியிட மாட்டோம் என நிரூபித்துள்ளது.

நாசவேலைகள் இடம்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேருவளையில் பொலீசார் மீது தாக்குதல்

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின்...

இன்றைய வானிலை மாற்றம்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப்...

சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் கைது

அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய...

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சேவை இடைநிறுத்தம்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை இன்று...