அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கு 5 வருட தடை

Date:

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 5 வருடங்களுக்கு நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதியமைச்சின் கீழ் உள்ள பல வரி ஒழுங்குமுறை சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இணைந்துகொண்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“மோட்டார் வாகனங்கள் மீதான வரி பற்றி நான் பேச விரும்புகிறேன். இது சொகுசு வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பது பற்றியது. சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டுக்கு சொகுசு கார்கள் தேவையில்லை. இந்நாட்டின் பொருளாதாரத்தின் படி இருக்கும் வாகனங்களே போதும். எனவே சொகுசு வாகனங்கள் இல்லாமல் குறைந்தது 5 வருடமாவது இந்த நாட்டை இயக்குங்கள். ஏனெனில் சொகுசு வாகனங்களுக்குச் செல்லும் அந்நியச் செலாவணி மிகப் பெரியது. அதன் காரணமாக, நமது வெளிநாட்டு சொத்துக்கள் குறைவதற்கு முக்கிய காரணம் சொகுசு வாகனங்கள்தான்” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...